Posts

Showing posts from 2014

தயிர் தரும் பலன்கள்

Image
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. தயிரில் உள்ள புரதம் பாலில் உள்ள புரதத்தை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 சதவீதம் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 சதவீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும். குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தரும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். பாலைத் தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பக்டீரியாவை உருவாக்குகிறது.தயிரில் இருக்கும் புரதம் இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது. வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது வெந்தயம் மற்றும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு வ

குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?

Image
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் எப்­போது தனக்குக் குழந்தை பிறக்­கு­மென்று அவளின் முதல் எதிர்­பார்ப்புத் தொடங்கி விடும். வைத்­தி­யர்­களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்­போது அவ­ளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறு­வார்கள். இவ்­வாறு ஆர்­வத்­துடன் இருக்கும் ஒரு தாய் தன்­னு­டைய உடல் நலத்­திலும் குழந்­தையின் உடல் நலத்­திலும் மிகவும் கவனம் செலுத்­து­வது அவ­சியம். அந்த வகையில் கடந்த காலங்­களில் போசாக்­கற்ற தாய்­மார்­களும் குழந்­தை­களும் ஆரோக்­கி­யத்தில் மிகவும் மந்த நிலை­யி­லேயே உள்­ளனர். இத­ன­டிப்­ப­டையில் கடந்த 17ஆம் திகதி சுகா­தார அமைச்சின் ஏற்­பாட்டில் கருத்­த­ரங்­கொன்று இடம்­பெற்­றது. இதன்­போது இலங்­கையை பொறுத்­த­மட்டில் 2007--2013 ஆண்டு காலப் பகு­தி­களில் நடத்­தப்­பட்ட ஆய்­வு­களின் பிர­காரம் ஏனைய உலக நாடு­க­ளையும் விட இலங்கை ஓர் ஆரோக்­கி­ய­மான நிலையில் காணப்­ப­டு­வ­தாக கருத்து தெரி­வித்­தி­ருந்­தது. அத­ன­டிப்­ப­டையில், சுகா­தார அமைச்சு கர்ப்­பிணி தாய்­மார்­க­ளுக்கும் அவர்­களின் குழந்­தை­க­ளுக்கும் பய­ன­ளிக்கும் வகையில் நல்ல பல கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தது. ஒரு த

சர்­வ­ரோக நிவா­ர­ணி­ வெண்டிக்காய்

Image
வெண்­டிக்காய் சாப்­பிட்டால் மூளை வளரும் என்று சொல்லிச் சொல்­லியே குழந்­தை­க­ளுக்கு சோறூட்டும் அம்­மாக்­களை பார்த்­துள்ளோம். வெண்­டிக்­காய்க்கும் அறிவு வளர்ச்­சிக்கும் நேரடி தொடர்பு இருக்­கி­றதோ இல்­லையோ அனீ­மியா, ஆஸ்­துமா, கொலஸ்ட்ரோல், மலச்­சிக்கல், புற்­றுநோய், நீரி­ழிவு, வயிற்­றுப்புண், பார்வைக் குறை­பாடு என சகல நோய்­க­ளையும் தீர்க்கும் சர்­வ­ரோக நிவா­ர­ணி­யாக வெண்டிக்காய் உள்­ளது.   கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு மிகவும் அவ­சி­ய­மான போலிக் அமிலம் வெண்­டிக்காயில் அதி­க­மாக உள்­ளது. கர்ப்­பத்தில் உள்ள குழந்­தை­யா­னது நல்­ல­ப­டி­யாக வள­ரவும் முதல் ட்ரைமெஸ்­டரின் போதான குழந்­தையின் நரம்பு குழாய்­களின் வளர்ச்­சிக்கும் இந்த போலிக் அமி­ல­மா­னது மிகவும் அவ­சியம்.   வெண்­டிக்­காயின் சிறப்பே அதன் வழவழப்புத் தன்­மைத்தான். ஆனால் அந்தக் வழவழப்பு பிடிக்­கா­மலே பலரும் அதை சேர்த்துக் கொள்­வ­தில்லை.   உண்­மை­யிலே அந்த வழ­வ­ழப்புத் தன்­மை­யில்தான் வெண்­டிக்­காயின் அத்­தனை மருத்­துவப் பலன்­களும் மறைந்­துள்­ளன. இந்த வழ­வ­ழப்பில் உள்ள நார்ச்­சத்து அல்சர் பாதித்­த­வர்­க­ளுக்கு அரு­ம­ருந்து.

சளித் தொல்லை

Image
ப ருவ மழையும், குளிரும் பாடாய்ப்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் பலவீனமானவர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலானோருக்கு தலைவலியில் தொடங்கி ஜலதோஷம், மூக்கடைப்பு, ஒழுகும் மூக்கு, தும்மல், சளி, சைனஸ், கபம் கட்டுதல் என்று மளிகைக்கடை பில் போல நீளுகிறது பிரச்னைகளின் பட்டியல். இவையெல்லாம் தொற்றாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்... வந்தபின் நிவாரணம் பெறவும், கீழ்க்கண்ட வீட்டு வைத்தியங்களை கடைபிடிக்கலாமே! * குழந்தைகள் தொடங்கி அனைவருமே காலை எழுந்ததும் சூடுபொறுக்கும் வெந்நீரில் முகம் கழுவுவது நல்லது. டீ போடுவதற்காக தேயிலைத் தூளைக் கொதிக்க வைக்கும்போது துளசி அல்லது இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால், சளித்தொல்லைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிக்கலாம். இஞ்சி, நெல்லிக்காய், கறிவேப்பிலை போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு, தேன், தேவைப்பட்டால் சர்க்கரை கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும். * காலை உணவைச் சூடாக உண்பது நலம். சட்னியில் இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். த

பழையசோறு

இரவில் இரண்டு கைப்பிடி அளவு சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்;காலையில் எழுந்ததும்,அதில் தேவையான அளவு கல் உப்பு சேர்க்க வேண்டும்;அத்துடன் சிறிய வெங்காயம்     மூன்றை நறுக்கிப் போட்டு கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்; இதற்குப்பெயரே நீராகாரம்! இதுதான் கோடை காலத்தை ஆரோக்கியமாக கழிக்க உதவும் காலை உணவு.இப்படி தினமும் ஒருவேளை நீராகாரத்தைப்பருகி வந்தால் என்ன நிகழும்? ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்  என்ற பழமொழியினைச் செயல்படுத்துவோம்;ஆற்றுநீரும்,அருவி நீரும் இல்லாத ஊர் மக்களுக்கு வரப்பிரசாதமாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட எளிய உணவே இந்த நீராகாரம். இந்த நீராகாரத்தை தினமும் அருந்தி வந்தால்,பக்கவாதம்,அசதி,முடக்குவாதம் போன்ற வாதநோய்கள் குணமாகிவிடும்;இதன் ஆரம்பக்கட்டமும் சீரடைந்துவிடும்; பித்தநோய்களான வயிற்றுப்புண்,ரத்தமூலம்,சருமநோய்களும் வராது;மேலும் கோடை கால நோய்களான வயிற்றுவலி,சருமத்தில் தோன்றும் வேனல்கட்டி,வியர்க்குரு,தேக அனல்(வெளியே அலைந்து திரிந்துவிட்டு வீட்டிற்க

Tips for a Good Night's Sleep:

Image
Adapted from "When You Can't Sleep: The ABCs of ZZZs," by the National Sleep Foundation. Set a schedule: Go to bed at a set time each night and get up at the same time each morning. Disrupting this schedule may lead to insomnia. "Sleeping in" on weekends also makes it harder to wake up early on Monday morning because it re-sets your sleep cycles for a later awakening. Exercise: Try to exercise 20 to 30 minutes a day. Daily exercise often helps people sleep, although a workout soon before bedtime may interfere with sleep. For maximum benefit, try to get your exercise about 5 to 6 hours before going to bed. Avoid caffeine, nicotine, and alcohol: Avoid drinks that contain caffeine, which acts as a stimulant and keeps people awake. Sources of caffeine include coffee, chocolate, soft drinks, non-herbal teas, diet drugs, and some pain relievers. Smokers tend to sleep very lightly and often wake up in the early morning due to nicotine wi

ஒற்றை தலைவலி

Image
ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது.    காரணம்: குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம். அறிகுறிகள்:இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிறு பிரச்சினைகள்   தீர்வுகள்: பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.   1.  எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும். 2.  நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும். 3. கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

பற்களில் கறை படிந்துள்ளதா? இலகுவாக நீற்கலாம்

Image
என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை ( decay)  கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது. FILE பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் ( pottasium permanganate) (KMNO4)  பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் ( small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும். கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும். வருடத்திற்கொருமுறை அனைவரும் இதன